Wednesday, August 22, 2007

இயற்கைத் தூது..

மலையின் அழகைக் கூட்டிச் சொல்லும்
கண்ணன் ஊதும் மூங்கில்களே
என் மன்னன் இவ்வழி செல்லும் போது
விழிகள் நனைந்ததைச் சொல்லுங்களேன்!
தேகம் தழுவி சிலிர்க்க வைக்கும்
ஈறக் காற்றின் பாகங்களே
என்னவன் உடலைத் தழுவும் போது
என் ஸ்பரிசம் எடுத்துச் செல்லுங்களேன்!

Friday, August 10, 2007

நண்பன்!!!

ஒரு நண்பனை நேசித்தேன்
அவன் நினைவோடு சுவாசித்தேன்
அவனை எனக்காக யாசித்தேன்.
கிடைக்கையில் கனவென்று உணர்ந்திட்டேன்!

காதல்...

வளர்த்த பாசம் வழியை மறைக்க
வந்தவன் பாசம் வாழ்வை கொடுக்க
அன்பை அன்பே அட்டிப்படைக்கும்
ஆன்டவன் இட்ட சாபமா காதல்...

Wednesday, August 8, 2007

நினைவு...

நீ நினைப்பாய் என்ற எண்ணத்தில்
என் நினைவை உனக்கு தந்தேன்.
நீ ஏற்பாய் என்ற எதிர்பார்பில்
என் உயிரில் உன்னை கரைத்தேன்
உன் மனதை என்னிடம் கூறி
என் கனவை இன்று கலைத்தாய்
கனவை கலைத்த காதலனே
உன் நினைவை என்று களைவாய்!!!

Friday, July 27, 2007

மறதி...

மறதி என்ற வேலிக்குள்-உன்
நினைவு மட்டும் வருவதில்லை
நான் பிடித்து வந்து அடைத்தாலும்
அரை நொடிக்கு கூட நின்றதில்லை.

Thursday, July 26, 2007

விலகியும் வாழ்வேன்!!!

விலகி நடந்த பாதைகள்
என் விழியில் முள்ளாய் உருத்த
உன் நினைவை தொலைத்த நிமிடங்கள்
அதில் நீராய் கரைந்து மறைய
நினைவில் உன்னை சுமக்கின்றேன்-இன்று
என்னை மறைத்து வாழ்கின்றேன்.
கனவாய் வாழ்வில் வந்தவனே-உன்னை
கடைசி மூச்சிலும் சுவாசிப்பேன்!!!

Friday, July 20, 2007

மனதில் பதிந்த முதல்....!!!

பார்குமிடம் எங்கும் உன் திருமுகம் தேடுகிறேன்
உன் முகம் கண்டதும் நிலம் பார்த்து நடக்கின்றேன்
தலை நிமிர்ந்து நடந்தவளை நிலம் பார்க்க வைத்தவனே
நீ உரவாக வருவாயா இல்லை உணர்வோடு மறைவாயா!!!

வலிகள்...

உன் வரவேர்பரையில் நிர்பவளை
வருகைதா என விண்ணப்பம் தந்தாய்
உன் வாழ்வோடு இனைந்தவளை
நலம் வாழ வாழ்த்தி சென்றாய்
நெஞ்சில் நிற்கும் நேசத்தை-நின்
நினைவிற்கு மட்டும் தருகிறேன்
உண்மையை உனர்ந்த காரணத்தால்
உள்ளம் உருகி ஓடுகின்றேன்
நீ இயல்பாக பிரித்து விட்டாய்-நான்
பிரிய மனமின்றி பிதற்றுகிறேன்.